search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
    X

    ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

    • இப்பயிற்சியில் கருத்தாளர்கள் நடித்தல் கதை கூறுதல் பேசுதல் விளையாடுதல் பாடுதல் மற்றும் வரைதல் ஆகிய செயல்பாடுகளை ஆசிரியர்களிடம் செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.
    • இப்பயிற்சியில் கருத்தாளர்கள் உட்பட 138 ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    கொள்ளிடம் வட்டார வள மையத்தின் சார்பாக தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 5 நாள் பயிற்சியாக நடைபெற்று வருகின்றது.இப்பயிற்சியின் தொடக்க விழா துளசேந்திரபுரம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமையேற்றார் மாவட்ட உதவி விட்ட அலுவலர் ஞானசேகரன் தொடங்கிவைத்தார். வட்டரா கல்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டரா வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரையாற்றினார்.

    இப்பயிற்சியில் கருத்தாளர்கள் நடித்தல் கதை கூறுதல் பேசுதல் விளையாடுதல் பாடுதல் மற்றும் வரைதல் ஆகிய செயல்பாடுகளை ஆசிரியர்களிடம் செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.

    மையத்தை இணை இயக்குநர் பாஸ்கர் சேதுபதி பார்வையிட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்று பாராட்டினார்.இப்பயிற்சியில் கருத்தாளர்கள் உட்பட 138 ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக பாலாகிருஷ்ணன் இராமன் சிங்கரவேல ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். ஐந்து நாள் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செய்து இருந்தார்.கருத்தாளர் கம்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×