

சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் வாணிவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்துவரும் பரகத்நிஷா மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டியில் வெற்றிபெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.
அவர் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் இருந்தனர்.