தபால் வாக்குகளை எண்ணும் போது முகவர்கள் வாக்குவாதம்

குத்தாலம் பேரூராட்சியில் தபால் வாக்குகளை எண்ணும் போது முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் வழங்கப்பட்டிருந்த 21 தபால் வாக்குகளில் 16 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதில் கெசட்டட் ஆபீசரின் கையெழுத்து இல்லை என ஒரு வாக்கினை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி முகவர்களும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். 

இதைத்தொடர்ந்து மணல்மேடு, தரங்கம்பாடி, வைதீஸ்வரன் கோயில் பேரூராட்சிகளுக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மயிலாடுதுறை நகராட்சி தபால் ஓட்டுகள் மொத்தம் 38. நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 24. திமுக- 6, காங்கிரஸ் 1, பாமக 1, அதிமுக 6.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் மிகவும் மந்தமான நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டது வரும் சூழலில் மயிலாடுதுறை தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com