ஆட்டோ திருடிய 2 பேர் கைது

குத்தாலத்தில் ஆட்டோ திருடிய 2 பேர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
Published on

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிச் சென்ற இருவரை தனிப்படை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் முத்தலிப் (35). ஆட்டோ டிரைவர். கடந்த 14-ந் தேதி இவரது வீட்டு வாசலில் நின்ற ஆட்டோவை காணவில்லை.

எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஆட்டோ மாயமானது குறித்து முத்தலிப் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் சேர்ந்த அலாவுதீன் (31).

நன்னிலம் தாலுகா ஆதலையூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திக் (31) ஆகிய இருவரும் ஆட்டோவை திருடிச் சென்று திருச்சியில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அலாவுதீன், சித்திக் இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்கள் திருடி விற்பனை செய்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com