சீர்காழியில் 24 வார்டுகளில் 13 பெண்கள் வெற்றி

சீர்காழி நகர்மன்ற தேர்தலில் 24 வார்டுகளில் 13 பெண்கள் வெற்றி பெற்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சீர்காழி:

சீர்காழி நகராட்சி தேர்தலில் இம்முறை 24 வார்டுகளில் 13 வார்டுகளில் பெண்கள் வெற்றிகனியை அள்ளி சென்றுள்ளனர்.

நடந்து முடிந்த சீர்காழி நகராட்சி தேர்தலில் 24 வார்டுகளில், 2வது வார்டில் ரஹ்மத்நிஷா (சுயே), 3வது வார்டில் கஸ்தூரிபாய் (திமுக), 4வது வார்டில் ரமாமணி (அதிமுக), 5வது வார்டில் கலைச்செல்வி (சுயே), 7 வது வார்டில் நித்யாதேவி (சுயே), 8வது வார்டில் நாகரெத்தனம் (அதிமுக), 10வது வார்டில் சூரியபிரபா (பாமக), 14வது வார்டில் ஜெயந்தி (சுயே), 16வது வார்டில் வள்ளி (திமுக), 17 வது வார்டில் ரம்யா (திமுக), 21வது வார்டில் முழுமதி (மதிமுக), 23வது வார்டில் ரேணுகாதேவி (திமுக), 24வது வார்டில் துர்காபரமேஸ்வரி (திமுக) என மொத்தம் 5 வார்டில் திமுக, 2வார்டில் அதிமுக, 4 வார்டில் சுயேட்சை, தலா 1வார்டில் மதிமுக, பாமக என 13 வார்டுகளில் பெண்கள் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com