search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் தங்கியிருந்த புதுவை மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்
    X

    பண்ருட்டியில் தங்கியிருந்த புதுவை மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்

    • தனியார் பஸ் கண்டக்டர் கடத்தியதாக புகார்
    • வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    புதுவை மாநிலம் கரிக்க லாம்பாக்கம் பெருங்க ளூர் கிராமத்தை சேர்ந்த வர் மாரிமுத்து மகள் வேதஸ்ரீ (வயது 19). இவர் லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பண்ருட்டி அடுத்த புலவனூர் கிராமத்தில் உள்ள உறவினரான மணி கண்டன் (34) என்பவரது வீட்டிற்கு வந்தார். சில நாட்கள் இங்கேய தங்கி ருந்த வேதஸ்ரீ, நேற்று முன்தி னம் இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கல்லூரி மாணவியை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் வேதஸ்ரீயை தேடினர். இதில் வேத ஸ்ரீக்கும் தனியார் பஸ் கண்டக்டருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிந்தது. மேலும், புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் அஜித், தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார் என மணி கண்டனிடம் கூறினர். இதையடுத்து தனது வீட்டில் தங்கியிருந்த மாணவி வேதஸ்ரீயை தனியார் பஸ் கண்டக்டர் கடத்தி சென்று விட்டதாக பண்ருட்டி போலீசாரிடம் மணிகண்டன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி வேதஸ்ரீயை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×