search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மசாஜ் தொழிலாளர்கள் பேரவை கூட்டம்
    X

      ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    மசாஜ் தொழிலாளர்கள் பேரவை கூட்டம்

    • சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் ஒகேன க்கல்லில் நடைபெற்றது.
    • ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவடடம் ஒகேனக்கலில் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்கத்தின் 7-ம் ஆண்டு பேரவை கூட்டம் ஒகேன க்கல்லில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மசாஜ் தொழிலாளர்களை சுகாதார தொழிலாளர்களாக மாநில அரசு அங்கீகரிக்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை உதவித் தொகையுடன் கூடிய இலவச கல்வி வழங்க வேண்டும். மசாஜ் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்து வழங்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும், கொரோனா கால நிவாரண நிதியாக அனைவருக்கும் ரூ.7500 வழங்க வேண்டும், மசாஜ் தொழிலாளர்கள் அனைவரையும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மசாஜ் தொழிலாளர்கள் சங்க மாதேஷ், முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் நஞ்சப்பன், மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் கலை செல்வம், மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மாதையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×