என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் பகுதியில் வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
- மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரசபா ளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்கு றிச்சி, ஆனங்கூர்,பெரிய சோளிபா ளையம், சின்ன சோளி பாளையம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வபரமத்திவேலூர் பகுதியில்
வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
ட்டார பகுதிகளில் நூற்றுக்க ணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.
இப்பகுதிகளில் விளை யும் மரவள்ளி கிழங்குகளை வியா பாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச் சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதி களில் செயல்பட்டு வரும் சவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலை களுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலை களில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்ய வும் வியாபாரிகள் அதிக அள வில் பெரிய அளவி லான மரவள்ளி கிழங்குகளை வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமை யாளர்கள் மரவள்ளிக்கி ழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல் ஜவ்வரிசி விலை உயரும் போதும், வீழ்ச்சி அடையும் போதும் அதன் விலைக்கு ஏற்ப சேகோ சர்வ் மூலம் மரவள்ளிக்கிழங்குக்கு விலை நிர்ணயம் செய்கின்ற னர். அதேபோல் சில்லறை வியா பாரிகள் மரவள்ளி கிழங்குகளை வாங்கி ஊர் பகுதிகளுக்கு கொண்டு சென்று கிராமங்களில் கிலோ கணக்கில் மர வள்ளிக்கி ழங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
மரவள்ளி கிழங்குகளை வாங்கிய பொதுமக்கள் மர வள்ளிக் கிழங்கில் உள்ள தோலை அகற்றி சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேக வைத்து தாழித்து சாப்பிடுகின்ற னர்.சிலர் முழுக்கிழங்கை உப்பு போட்டு வேக வைத்து சாப்பிடு கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று டன் ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கு விற்பனை யானது. தற்போது மில் அதிபர்கள் மர வள்ளிக்கிழங்கை டன் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரத்திற்கு வாங்கி செல்கின்றனர் அதே போல் சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒரு டன் மர வள்ளிக்கிழங்கை ரூ 15 ஆயி ரத்திற்கு வாங்கி செல்கின்றனர்.
மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ள தாலும், ஜவ்வரிசி விலை உயர்வு அடைந்துள்ள தாலும் மரவள்ளி கிழங்கின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். மர வள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிகி ழங்கு பயிர் செய்துள்ள விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்