போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போலீசார் சார்பில் மாரத்தான் போட்டி : போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போலீசார் சார்பில் மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு கலந்து ெகாண்டு தொடங்கி வைத்தார்.
போலீசார் சார்பில் மாரத்தான் போட்டியை போலீஸ் சூப்பிரண்டு கலந்து ெகாண்டு தொடங்கி வைத்தார்.
Published on

கடலூர்:

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு தினமான இன்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு டவுன்ஹாலில் இருந்து பாரதி சாலை, பீச் ரோடு வழியாக சென்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முடித்தனர். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com