search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  ராஜா எம்.எல்.ஏ. நேரில் நன்றி
    X

    தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ராஜா எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து நன்றி தெரித்த போது எடுத்தபடம். அருகில் சண்முகையா எம்.எல்.ஏ. உள்ளார்.

    தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜா எம்.எல்.ஏ. நேரில் நன்றி

    • பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • இதையடுத்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    கடந்த 11-ந் தேதி தியாகி இம்மானு வேல் சேகரனின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு நீண்ட நாள் கோரிக்கையான பரமக்குடி யில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சென்னையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    அப்போது அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் கயல்விழி செல்வராஜ் , சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×