search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    முக்கூடல் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
    X

    முக்கூடல் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

    • பாபநாசம் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் இசக்கிராஜ்
    • இன்று அதிகாலை அம்பையில் இருந்து நெல்லைக்கு தடம் எண் 130-டி என்ற பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாபநாசம் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் இசக்கிராஜ் (வயது 45).

    தகராறு

    இவர் இன்று அதிகாலை அம்பையில் இருந்து நெல்லைக்கு தடம் எண் 130-டி என்ற பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். முக்கூடல் அருகே பாப்பாக்குடி மெயின் ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த நந்தன்தட்டயை சேர்ந்த குமார் மீது பஸ் மோதுவது போல் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர், பஸ்சை வழிமறித்து டிரைவர் இசக்கிராஜிடம் தகராறு செய்தார். அப்போது அந்த நின்றிருந்த ஒருவர், குமாருடன் சேர்ந்து பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    கைது

    இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் குமார் மற்றும் மற்றொரு நபர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

    பாப்பாக்குடி பஸ் நிறுத்த பகுதியில் சாலையின் இருபுறமும் கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பால் சாலையும் குறுகலாக உள்ள நிலையில், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகமாக செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×