search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே மாற்றுத்திறனாளியை தாக்கியவர் கைது
    X

    கோப்பு படம்

    வடமதுரை அருகே மாற்றுத்திறனாளியை தாக்கியவர் கைது

    • வாலிபரின் ஊனத்தை சுட்டிக்காட்டி திட்டி அவரை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மாற்றுத்திறனாளியை தாக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே செங்குறிச்சி தேவேந்திர புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது34). மாற்றுத்திறனாளி. இவர் தனது வீட்டின் முன்பு 3 சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பழனிச்சாமி, முருகன் ஆகியோர் லாரியை ஓட்டிச்செல்ல வேண்டும். வண்டியை எடுங்கள் என கூறி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஊனத்தை சுட்டிக்காட்டி திட்டியும் அவரை தாக்கியும் உள்ளனர்.

    இது குறித்து வடமதுரை ேபாலீசில் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

    பாடியூர் கருவேப்பிலை தோட்டத்தை சேர்ந்தவர் குயிலி(38). இவரது மாம னார் கருப்பண்னனுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவ த்தன்று அவர்கள் நிலத்தில் ராமகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் உழவு பணி மேற்கொண்டனர்.

    இதனை கருப்பணன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயம் அடைந்த கருப்பணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் குயிலியையும் தாக்கி திட்டி உள்ளனர். இது குறித்து வடமதுரை போலீசில் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    Next Story
    ×