பல்லடத்தில் ஆணழகன் போட்டி

அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வீரர்களை பாராட்டினார்.
பல்லடத்தில்  ஆணழகன் போட்டி
Published on

பல்லடம் :

திருப்பூர் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் சார்பில் பல்லடத்தில் ஆணழகன் போட்டி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சங்க தலைவர் டைமன்ட் பிரகாஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டி ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் வரவேற்றார். 10 பிரிவுகளில் நடந்த ஆணழகன் போட்டியில் 120 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியனாக திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் முதலிடத்தையும், மங்கலத்தை சேர்ந்த சிற்றரசு இரண்டாமிடத்தையும் வென்றனர். போட்டிகளில் வெற்ற பெற்றவர்களுக்கு திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வீரர்களை பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com