search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் டவுனில், மக்களை தேடி மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் டவுனில், மக்களை தேடி மருத்துவ முகாம்

    • டவுன் கருவேலன் குன்று தெருவில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் வெள்ளைச்சாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நெல்லை டவுன் கருவேலன் குன்று தெரு ரேஷன் கடை முன்பாக மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை டவுன் சுகாதார அலுவலர் இளங்கோ தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் சளி, இருமல், பசியின்மை, எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வை யாளர் முருகன், ஆய்வக நுட்புணர் கண்ணன், ரேடியோ கிராபர் சிஜின், ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×