search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி காந்தல் காசிவிஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
    X

    ஊட்டி காந்தல் காசிவிஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

    • பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு கால சாந்தி பூஜை, 11 மணிக்கு உச்சி கால பூஜை, மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதியம் 2 மணிக்கு விக்னேஸ்வரா பூஜை, மகா யாக பூஜை, மாலை 3.30 மணிக்கு மகா பிரதோஷ அபிஷேகம், 5.30 மணிக்கு தீபாராதனை, 6 மணிக்கு சுவாமி ஆலயம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். இதேபோல் ஊட்டி -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலி சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×