search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டங்கள்
    X

    கிராம சபை கூட்டங்கள்

    • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் முதலைக்குளம் ஊராட்சி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பாண்டி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன், பற்றாளர் ரோஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் பாண்டி திட்டங்கள் குறித்து அறிக்கை வாசித்தார்.

    இதே போல் விக்கிர மங்கலம் ஊராட்சியில் செக்கான்கோவில்பட்டி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் கலியுக நாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்விசெல்வம், பற்றாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார்.

    வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் ஒய்யனன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் முனி யராஜ் அறிக்கை வாசித்தார்.

    மேலக்கால் ஊராட்சியில் தலைவர் முருகேஸ்வரி, வீரபத்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார்.

    திருவாலவாயநல்லூர் ஊராட்சியில்தலைவர் சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாலிக் முன்னிலை வகித்தார். செயலாளர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    இதே போல் முள்ளி பள்ளம், சி.புதூர், சித்தாலங்குடி, ரிஷபம், நெடுங்குளம், திருவேடகம், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், குருவித்துறை மற்றும் செல்லம்பட்டி ஒன்றியத்தில் சக்கரப்ப நாயக்கனூர், எரவார்பட்டி, பானாமூப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    Next Story
    ×