search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவது இல்லை
    X

    பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் தண்ணீர் பந்தலை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அருகில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் பலர் உள்ளனர்.

    பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவது இல்லை

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவது இல்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
    • திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடமாடும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. அ.தி.மு.க இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.

    வட்டச் செயலாளர் பொன் முருகன் வரவேற்றார். இதில்

    அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி கோடை காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. திருப்ப ரங்குன்றம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது.

    பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் மது கடைகளும் அமைந்துள்ளன. இவற்றை அகற்றக்கோரி சட்டப்பேரவையில் நான் குரல் கொடுத்த போது அதற்காக ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் மழுப்பலான பதிலை தெரிவித்தார். மதுக்கடைகளை அகற்றுவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டம் டைட்டல் பார்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அவர்கள் அறிவிப்போடு நிறுத்தி விடுவார்கள். அதனை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை செய்ததில்லை. மதுரை தொழில் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர்கள் அறிவிக்கவில்லை.

    அதே சமயத்தில் அ.தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை உடனடியாக செயல்படுத்தி காண்பிக்கும். தி.மு.க. அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்ட செயலாளர் நாகரத்தினம், என்.எஸ். பாலமுருகன், பாலா, தவிடன், முத்துக்குமார், அக்பர் அலி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×