

மதுரை
மதுரை வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மீது மதுரை மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
வரிச்சியூர் செல்வத்துக்கு நகைகள் அணிவதில் அதிக ஆர்வம் உண்டு. தற்போது அவர் பூமாலை வடிவில் 100 பவுன் தங்க செயின் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.