search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: 25-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடக்கம்
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: 25-ந் தேதி கந்த சஷ்டி விழா தொடக்கம்

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் தொடக்கப்படுகிறது.
    • 1500 பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    திருப்பரங்குன்றம்

    முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவினையொட்டி மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கி 6 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான விழா வருகின்ற 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழா வின் முக்கிய நிகழ்ச்சி யாக வருகின்ற 29ந் தேதி அம்பாளிடம் முருகப் பெருமான் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், 30-ந் தேதி சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்கார நிகழ்ச்சியும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 31-ந் தேதி காலை முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்த ருளி சிறிய சட்டத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சியும் அன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிச னமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆயிரக் கணக்கான தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக காலையில் பால், எலுமிச்சைச்சாறு, திணை மாவு மற்றும் 1500 பக்தர் களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் காலையிலும் மாலையிலும் நடைபெறும் சண்முகார்ச்சனை விழா வினை பார்ப்பதற்காக கோவிலில் பல்வேறு இடங் களில் பெரிய அளவி லான திரைகள் வைக்கப் பட்டு நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படும். பக்தர்களுக்கு சரவணப் பொய்கையில்குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் கோவில் வாசல் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் கழிப்பறை வசதிக ளும் கோயில் நிர்வாகத்தினா லால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சூரிய கிரகணம்

    25-ந் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளதால் அன்றைய தினம் பிற்பகல் 11.30 மணி அளவில் கோவில் நடை சாத்தப்பட்டு இரவு 7 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×