என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபர் மர்மச்சாவு
- மேலூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குடிபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மலம்பட்டி விலக்கில் பிள்ளையார்கோவில் உள்ளது.
இந்த கோவிலின் பின்புறம் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை இந்த பள்ளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தேங்கிய தண்ணீரில் மிதந்தபடி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்தப்பகுதியினர் உடனே மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி. ஆர்லியஸ் ெரபோனி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். இறந்து கிடந்தவரின் தலையில் லேசான காயம் இருந்தது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? குடிபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்