

மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (37). இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.