

மதுரை
மதுரை தேவி நகரை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி தனபாக்கியம் (35). இவரை அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் (56) என்பவரின் மகன் கிண்டல் செய்து வந்தார். இதுகுறித்து தனபாக்கியம் போலீசில் புகார் செய்தார். ஆத்திரம் அடைந்த பார்த்திபன், அந்த வாலிபரை தாக்கி விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபனை கைது செய்தனர்.