முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மதுரையில் தொடங்கியது. ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கலெக்டர் அனீஷ் சேகர் வாழ்த்து தெரிவித்தார். அருகில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கலெக்டர் அனீஷ் சேகர் வாழ்த்து தெரிவித்தார். அருகில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Published on

மதுரை

தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதனை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார். இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்நாளான இன்று காலை 12 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன.

திருப்பாலை பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி 1,2-ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கிரிக்கெட் போட்டி, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் 2,3-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

கபடி, சிலம்பம், கூடைப் பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து ஆகிய போட்டிகள் 4,5-ந் தேதி களிலும், கால்பந்து 5,6-ந் தேதிகளிலும், தடகளம் 7-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவி களுக்கான இறகு பந்து, மேசைப்பந்து ஆகியவை 6,7-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளி களுக்கான தடகளப்போட்டி 6-ம் தேதியும், இறகுப்பந்து, கபடி எறிபந்து, கைப்பந்து ஆகியவை 7-ம் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.அரசு ஊழியர் களுக்கான கைப்பந்து, இறகுப்பந்து, கபடி, செஸ் போட்டிகள் 8,9-ந் தேதிகளிலும், தடகளம் 11-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கான கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் 11,12-ந் தேதிகளில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. அதே தேதிகளில் திருப்பாலை பள்ளிக்கூட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.

தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி களில் ஆன்லைன் பதிவு பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும் என தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி விளை யாட்டு வீரர் வீராங்கனை கள் இன்று காலை முதலே ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

மதுரை மாவட்ட விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பெற்றவருக்கு, ரூ. 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மதுரை மாவட்ட விளை யாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் அரசு சார்பில் பங்கேற்பார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com