search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு
    X

    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு

    • ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    மதுரை

    ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) சங்க நிர்வாகி சேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    மதுரை, தேனி, திண்டுக் கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவ கங்கை, உள்ளிட்ட மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 20 இடங்களில் வரு கின்ற விஜ யதசமி நாளன்று (22-ந் தேதி) ஊர்வ லம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    அன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ். சார்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை யான காக்கி டவுசர், வெள்ளை சட்டை, தொப்பி, பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வ லமாக சுற்றி இறுதியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித் திருந்தும் இதுவரை சம் பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

    எனவே விஜயதசமி அன்று பேரணி, கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண் டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தனர்.

    இந்த மனு நீதிபதி இளங் கோவன் முன் விசார ணைக்கு வந்தது. விசாரணை யின் போது நீதிபதி, இதே கோரிக்கைகளை வலியு றுத்தி பல்வேறு வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். இந்த வழக்குகளை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×