search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
    X

    குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

    • குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டர்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை கீரைத்துறை லாடபிள்ளை தெருவை சேர்ந்தவர் பழனி (வயது28). இவர்மீது பெண்களை கிண்டல் செய்து தாக்கியது, கொலை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் பழனி மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி பழனியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், அவரை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×