search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்குயில்குடியில் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.
    X

    கீழக்குயில்குடியில் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

    • கீழக்குயில்குடியில் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
    • ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த கீழக்குயில்குடியில் ரூ.32 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டமிடப் பட்ட பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விரைந்து செயல்படுத்த திருப்பரங்குன்றம் சட்டப்பே ரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குயில்குடி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்கள் சமணர் படுக்கை பகுதியில் சாலை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்ப டையில் கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.32 லட்சத்து 56 ஆயிரத்திற்கு பேவர்பிளாக் சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது.

    மேலும் அந்தப் பணிகள் நான்கு மாதங்களில் முடிக் கப்படும் என தெரிவிக்கப் பட்டது. ஆனால் தற்போது வரை அங்கு பேவர் பிளாக் சாலைப்பணிகள் எதுவும் தொடங்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து உடன டியாக பேவர் பிளார் சாலை அமைக்கும் பணி யினை செய்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றேன். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×