பிரதோஷ வழிபாடு

சோழவந்தான் பகுதிகளில் பிரதோஷ நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பிரதோஷ வழிபாடு
Published on

சோழவந்தான்

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத (சிவன்) கோவி லில் பிரதோஷ வழிபாட்டில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்று, மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிர தோஷ வழிபாட்டில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாவய நல்லூர் மீனாட்சி சுந்தரேசு வரர் கோவில், விக்கி ரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென் கரை அகிலாண்டேசுவரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதி உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com