search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்து வரும் ஆவணி மூல திருவிழாவின் 7-ம் நாளான இன்று வளையல் விற்ற லீலை நடைபெற்றது.

    ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்

    • ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
    • வளையல் விற்ற லீலையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக் கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவ–ராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.

    இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழா–வையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைக–ளிலும் 4 ஆவணி மூல வீதி–களிலும் சுவாமியும், அம்ம–னும் பஞ்ச மூர்த்திகளுடன் உலா வந்து மண்டகப்படிக–ளில் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள்பாலிப்பார்கள்.

    விழாவின் முக்கிய அம் சங்களாக திருவிளையா–டல் புராண தொடர்பான உற்ச–வங்கள் நடைபெறும். அதன் படி கடந்த 19-ந்தேதி கருங் குருவிக்கு உபதேசம் செய் தல், 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற் கிழி அருளல், 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளல், 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டி லீலைகள் நடந்தன.

    நேற்று இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல் நடந்தது. இன்று (25-ந்தேதி, வெள்ளிக்கிழமை) வளை–யல் விற்ற திருவிளை–யாடல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மீனாட்சி அம்மன், சுந்தரேசு–வரரை தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ் வாக இன்று இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறு–கிறது. சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மதுரை மகாராணியாக மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வார். ஆவணி மூலத் திருநாளின் 7-ம் நாள் முதல் பங்குனி வரையான எட்டு மாதங்களுக்கு மதுரை மன்னராக சுந்தரேசப் பெரு–மான் ஆட்சிபுரிவார். இத–னைக் குறிக்கும் வகையி–லேயே சுந்தரேசப் பெருமா–னுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

    நாளை (26-ந்தேதி) நரியை பரியாக்கியது, குதி–ரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந் தது நடைபெறும். அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக–ளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவா–தவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளு–வார்கள்.

    அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக் கப்படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபு–ரம் வழியாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடு–வதற்கும் அனுமதி அளிக்கப் படும். 28-ந்தேதி விறகு விற்றல் லீலை நடைபெறும்.

    Next Story
    ×