search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் திறப்பு
    X

    மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் திறப்பு

    • மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் திறப்புவிழா நடந்தது.
    • இந்த மையத்தில் 7 நாட்களுக்கு இலவச ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

    மதுரை

    மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் ரத்த பரிசோதனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் ஏ. ஜே. பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மைய திறப்பு விழாவில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரத்த பரிசோதனை ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மதுரை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் மோகன் குமார், திருச்சி எம்.எஸ்.ஆர். ராஜேந்திரன், அரசு வழக்கறி ஞர்கள் கோட்டைச்சாமி, தீபக் மற்றும் முக்கிய பிர முகர்கள் டாக்டர்கள் திர ளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், அமுதா சாமுண்டீஸ்வரி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    இந்த ரத்த பரிசோதனை மையத்தில் வருகிற 23- தேதி வரை 7 நாட்களுக்கு இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாறு ரத்த பரிசோதனை நிலைய பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×