என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் புதிய தற்காலிக பஸ் நிலையம்
- மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் புதிய தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் செயல்படுகிறது.
- ஆய்வின்போது மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், கமிஷனர் பட்டுராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பழைய பஸ் நிலையம் இடித்து ரூ.7.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பஸ்நிலையத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
இதன் காரணமாக மேலூரில் அரசு பஸ்கள்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு சிரமமாக இருந்தது. இது தொடர்பாக வணிகர்கள், பொதுமக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.
மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளார் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரின் மனு அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உயர் அதிகாரி களிடம் விசாரணை நடத்தி மேலூர்- அழகர் கோவில் ரோட்டில் உள்ள சுந்தரப்பன் கண்மாய் எதிரே உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் காலி இடத்தை தற்காலிக பஸ் நிலையத்திற்கு ஒதுக்கி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று முதல் மேற்கண்ட இடத்தில் புதிய தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. மதுரை மற்றும் பிற பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் வந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் விரைவில் செய்யப்படும் என நகராட்சி தலைவர் முகமது யாசின் தெரிவித்தர். முன்னதாக இன்று தற்காலிக பஸ் நிலையத்தை அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், கமிஷனர் பட்டுராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்