search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாலை பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    பனி மூட்டத்தின் நடுவே விளக்குகளை ஒளிரவிட்ட படி கடந்து சென்ற வாகனங்கள்.

    அதிகாலை பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

    • வாடிப்பட்டி பகுதியில் அதிகாலை பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
    • நீரேத்தான், மேட்டு நீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் பனிபொழிவு காணப்பட்டது.

    வாடிப்பட்டி

    இன்று ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் சிறுமலை பகுதியில் மலை முழுவதும் தெரியாதபடி பனிபொழிவு அதிகமாக இருந்தது.

    வாடிப்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. பின் சாறல் மழையும் பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் விராலிப் பட்டி, செம்மினிப்பட்டி, கச்சை கட்டி, குட்லாடம்பட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, தாதம்பட்டி, நீரேத்தான், மேட்டு நீரேத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பனிபொழிவு காணப்பட்டது.

    இதனால் மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை, வாடிப்பட்டி நகர்புறசாலை முழுவதும் தெரியாதபடி பனிமூட்டம் அடர்ந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையோரங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×