பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வுக்கூட்டம்

மதுரையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வுக்கூட்டம்
Published on

மதுரை

மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை பொழி வின் போது மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னேற் பாடுகள் தொடர்பாகவும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் தொடர் பாகவும் அனைத்துத் துறை அலுவர்களுடன் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநக ராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீரோட்ட பாதைகளை சரி செய்து தும்புகளில் சேர்ந்துள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்,

இடியும் நிலை யில் உள்ள கட்டிடங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் அருகே பொது மக்கள் அணுகாத வண்ணம் தேவை யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் துறை வாரியாக சிறப்பு குழுக்கள், சிறப்பு பணிகள் ஏற்படுத்தவும், மீட்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகள் தயார் நிலை யில் வைத்திருக்கவும், மழை யினால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்கும் வைக்கும் சிறப்பு முகாம்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளனவா என்று ஆய்வு செய்யவும், மலேரியா/டெங்கு காய்ச்சல் முதலிய பருவகால நோய்கள் பரவாத வண்ணம் தேவை யான முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தனியார் மருத்துவமனை கள் பட்டியல் மற்றும் அம்மருத்துவமனையில் உள்ள மருந்து வகைகள் மற்றும் இதர வசதி விபரம் அடங்கிய பதிவேடு பரா மரிக்கப்பட வேண்டும். கன மழையில் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றிடவும், வெள்ளத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க வும் 24 x 7 கால அளவிலும் தயார் நிலையில் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும், கடந்த மழைக்காலங்களில் ஏற்கனவே பாதிப்படைந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது,

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலத்தில், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com