search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

    எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    • நினைவு தினத்தை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மதுரையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணியினர் 3 ஆயிரம் பேர் மாவட்டச்செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேரணியாக சென்று மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் பி.எஸ். கண்ணன், முத்து இருளாண்டி, மாண வரணி மாநில இணை செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், சோலை இளவரசன், ராமநாதன், வையதுரைமாரி,மார்க்கெட் ராமமூர்த்தி, வேல்முருகன், ஆரைக்குடி முத்துராம லிங்கம், கீழமாத்தூர் தங்கராஜ், கருப்பு சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×