search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள்: இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது
    X

    முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள்: இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது

    • முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை ஐகோர்ட்டில் சீர் மரபினர் சங்கத்தின் தலைவர் ஜெபமணி மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதில் எம்.பி.சி.வி., டி.என்.சி. மற்றும் எம்.பி.சி. என 3 பிரிவுகளாக வகைப்படுத்தி தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளனர். இது சட்ட விரோதமானது.

    ஏற்கனவே இது போல 3பிரிவுகளின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் உடற்கல்வி தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை வெளியி டுள்ளது.

    இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே மிகவும் பிற்படுத்தப்படடுருக்கான இட ஒதுக்கிட்டை 3 பிரிவுகளின் கீழ் பிரித்து வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திக் கொள்ளலாம். ஆனால் இறுதி முடிவு இந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×