search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது
    X

    கைதான மணிகண்டன்

    பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

    • மதுரையில் மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பேஸ்புக் மூலம் இருவரும் பழக்கமானார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த 27 வயது மாற்றுத்திறனாளி பெண் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கால்களை இழந்த மாற்றுத்திறனாளியான நான் 6-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறேன். எனது பெற்றோர் மதுரை-தேனி மெயின் ரோட்டில் தையல்கடை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் மதுரை பொட்டக்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சதுரகிரி மகன் மணிகண்டன் (வயது 23) என்பவர் பழக்கமானார். இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் பேசிக்கொண்டு வந்தோம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று எனது பெற்றோர் கடைக்கு சென்று விட நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது அங்கு வந்த மணிகண்டன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் என்னிடம் அத்துமீற முயன்றார். ஆனால் அதற்கு நான் மறுத்தேன்.

    அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இவ்வாறு பலமுறை மணிகண்டன் என்னிடம் உறவு கொண்டார். இதில் நான் கர்ப்பம் ஆனேன். இதை அறிந்த மணிகண்டன் உடனே மாத்திரை மற்றும் பப்பாளியை சாப்பிட வைத்து அந்த கர்ப்பத்தை கலைக்க செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மணிகண்டன் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் என்னை திருமணம் செய்யவும் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது பெற்றோரை அழைத்துக் கொண்டு பொட்டக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது அவரும், அவரது தாயார் பஞ்சவர்ணம் எங்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் ஆலோசனைபேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்தபெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    Next Story
    ×