search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாைலயோர வியாபாரிகளுக்கான கடனுதவி ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சாைலயோர வியாபாரிகளுக்கான கடனுதவி ஆலோசனை கூட்டம்

    • சாைலயோர வியாபாரிகளுக்கான கடனுதவி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • புதியதாக கடனுதவி பெறும் பயனாளிகளுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. வெங்கடேசன் எம்.பி., மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக் கான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாமில் புதியதாக கடனுதவி பெறும் பயனாளி களுக்கு 3 கட்டங்களில் ரூ.1 லட்சம் அனைத்து வங்கிகள் மூலம் கடன் தொகை விண்ணப்பித்த அன்றே வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மொத்தம் 14 ஆயிரத்து 402 சாலை யோர வியாபாரிகள் பயன்பெற்று உள்ளனர். மதுரை மாநகராட்சி பகுதிக ளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிக ளுக்கும் அனைத்து வங்கி களும் கடனுதவி வழங்க வேண்டும். கடனுதவி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தாமல் விண்ணப் பித்த அன்றே கடனுதவி வழங்குவதற்கு வங்கிகள் முன்வர வேண்டும். வங்கி கள் பொறுப்பு அலுவலர் களை நியமித்து கடனுதவி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. வருகிற 1-ந்தேதி சாலை யோர வியாபாரி களுக்கான சிறப்பு கடன் மேளா தமுக்கம் மைதா னத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், வீரன், சிவசுப்பிரமணியன், கோபால், சுகாதார ஆய்வாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் அனைத்து முன்னணி வங்கி மேலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×