search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு சீல்
    X

    அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு 'சீல்'

    • அனுமதியின்றி செயல்பட்ட மதுபான கூடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    • அங்கிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள வெல்ல நாதன்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடை அருகே அனுமதியின்றி திறந்தவெளியில் மது பார் இயங்கி வந்தது. இங்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி யில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மேலூர் கோட்டாட்சியர் பிர்தவுஸ் பாத்திமா மற்றும் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது மதுபார் அனுமதியின்றி நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மது பார் கூடத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த வாரம் அரசு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மது விற்றதாக கச்சிராயன்பட்டி டாஸ்மாக் கடை ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×