search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவந்தான் அருகே கும்பாபிஷேக விழா
    X

    சோழவந்தான் அருகே கும்பாபிஷேக விழா

    • சோழவந்தான் அருகே கும்பாபிஷேக விழா நடந்தது.
    • முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலத்தில் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தேறியது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடாகி நல்லகுட்டி வகையறாக்கள் புனிதநீர் குடம் சுமந்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இதன்பின் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேக்கிழார் பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டியை சேர்ந்த நல்லகுட்டி வகையறா, விக்கிரமங்கலம் ஆண்டித்தேவர் வகையறா மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன், பார்வர்டு பிளாக் நிர்வாகி ரெட்காசி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி சேர்மன் கலியுகநாதன், முன்னாள் ஒன்றிய சேர்மன் இளங்கோவன், அஜித்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×