search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ண ஜெயந்தி விழா
    X

    கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஊர்வலம் நடந்ததையும், வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பங்கேற்ற இளைஞர்களையும் படத்தில் காணலாம்.

    கிருஷ்ண ஜெயந்தி விழா

    • கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • வழுக்கு மரம், உறியடி போட்டியில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள், கையில் புல்லாங்குழலுடன், கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணன் திருவுருவ சிலை மேளதாளம் முழங்க கிரா மங்களில் உள்ள வீதிகளில் உலா வந்தது. இதில் பலர் கிராமத்தில் உள்ள மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வ லத்தில் கலந்து கொண்டனர்.

    மஞ்சள் நீரை ஊற்றி மஞ்சள் நீராடினர். கிருஷ்ணன் வேடத்தில் இருந்த இளைஞர் உறியடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராள மான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் 30 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.

    உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊர் நாட்டாமை அழகர்சாமி பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அச்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மல்லிகா பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×