மல்லிகை பூக்கள் ரூ.2,500-க்கு விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகை பூக்கள் ரூ.2,500-க்கு விற்பனையானது. கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
மல்லிகை பூக்கள் ரூ.2,500-க்கு விற்பனை
Published on

மதுரை

உலகம் முழுவதும் வெகுவி மரிசையாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை மதுரையிலும் நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கடந்த மூன்று நாட்களை ஒப்பிடு கையில் கிலோ 1500 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

இன்று 2500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய் என்று விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை 2500 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. அது போல பிச்சி மற்றும் முல்லை பூக்கள் கிலோ 1200 ரூபாய்க்கும், அரளி, சம்பங்கி மலர்கள் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கனகாம்பரம் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இது தொடர்பாக மலர் வியாபாரிகள் கூறுகையில் தற்போது பனி அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளது. இந்த விலை வருகிற புத்தாண்டு வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற பூக்களின் விலை வழக்கம்போல இருப்பதால் பூ மார்க்கெட்டில் பொது மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com