search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும்-பா.ஜனதா
    X

    கலெக்டர் அனீஷ்சேகரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

    முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும்-பா.ஜனதா

    • முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • சதீஷ், ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிசிறப்புகள் உள்ளன. மதுரையை தொழில் நகர மாகவும் அழைக்கப்பட வேண்டும். மதுரையில் மிகப்பெரிய தொழிற்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை.

    இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

    இன்னும் சில ஆண்டு களில் மதுரை உள்கட்ட மைப்பு அமையப்பெற்ற நகரமாக மாற உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை தொழில் நகரமாக மாற்றும் வகையிலும் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.

    தற்பொழுது தமிழக அரசால் மாட்டுத்தாவ ணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க்கை இதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட வடபழஞ்சியில் அமைக்க வேண்டும்.

    அந்த பகுதியில் டைட்டல் பார்க் அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதே போல் மதுரையை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி வருகிறது.

    மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட் குவாரிகளும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால் அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகள் இயங்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, வக்கீல் ரவீந்திரன், வேல்முருகன், வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ்,

    ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×