search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூசோ நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர் அஞ்சலி
    X

    ரூசோ நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர் அஞ்சலி

    • தேவகோட்டை ரூசோ நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
    • மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ரூசோ 25-வது நினைவு தினத்தையொட்டி தேவகோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர், ஐ.ஜே.கே. முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கட்சியினர் ஊர்வலமாக சென்று ரூசோ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இதில் பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் வரதராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமாரோஸ் மார்ட்டீன், துணைத் தலைவர் இளவரசி ஜெரோம், மாநில போராட்ட குழு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ், அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மகளிரணி துணைச் செயலாளர் சகிலா புரோஸ், இளைஞரணி துணை செயலாளர் செந்தூர் பாண்டி, மதுரை மாநகர மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனடிக்ட், மதுரை மாநகர மாவட்ட இணை செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×