search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
    X

    உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

    • உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர் களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசால் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது.

    மேற்படி சிறப்பு விழிப் புணர்வு மற்றும் வழிகாட்டு தல் நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் நடைபெறவுள்ளது.

    மேற்படி நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கள் மற்றும் வழிகாட்டுதல் களை பல்வேறு துறை சார்ந்த அலுவவர்கள் வழங்க வுள்ளார்கள். மேலும், பொறி யியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது தொடர் பாகவும் கல்விக்கடன், கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். உயர்கல்வி பயிலுவதற்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று உட்பட இணைய வழிச்சான்றுகள் அங்கேயே அமைக்கப் பட்டுள்ள இரு சேவை மையம் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×