search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலை உணவு திட்டத்தை பார்வையிட்ட அரசு செயலாளர்
    X

    மதுரையில் இன்று பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி தயாராகும் பணியை அரசு செயலாளர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உள்ளார்.


    காலை உணவு திட்டத்தை பார்வையிட்ட அரசு செயலாளர்

    • மதுரை பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அரசு செயலாளர் பார்வையிட்டார்.
    • மதுரை மாவட்டத்தில் 26 பள்ளிக்கூடங்களுக்கு நெல்பேட்டை சமையல் கூடத்தில் இருந்து, காலை உணவு தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 26 பள்ளிக்கூடங்களுக்கு நெல்பேட்டை சமையல் கூடத்தில் இருந்து, காலை உணவு தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான சந்திரமோகன், இன்று நெல்பேட்டை மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அங்கு அவர் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர் அரசு செயலாளர் சந்திரமோகன் ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன், கூடுதல் கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

    Next Story
    ×