search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்வாரிய அதிகாரி மர்ம சாவு
    X

    மின்வாரிய அதிகாரி மர்ம சாவு

    • மதுரை வைகை ஆற்று பாலத்தில் மின்வாரிய அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • பாலமுருகன் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் மோதிலால் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(51). இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கிராமத்தில் மின்வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வார விடுமுறையை முன்னிட்டு சம்பவத்தன்று பாலமுருகன் ஊருக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் ஆரப்பாளையம் வைகை வடகரை அம்மா பாலம் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது இறந்து கிடப்பது மின்வாரிய ஆய்வாளர் பாலமுருகன் என தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை அடையாளம் காண்பித்தனர்.

    இது தொடர்பாக மனைவி நாகராணி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×