டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது.
டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

மதுரை

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவ மனைகள், மருத்து வக்கல்லூரிகளில் பணி யாற்றும் டாக்டர்க ளுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டி இன்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுவரை அதனை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com