search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டங்கள்
    X

    தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டங்கள்

    • தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டங்கள் நடந்தது.
    • தன்ராஜ் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். அவை தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தி.மு.க. நிர்வாகி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதேபோன்று அலங்காநல்லூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நகர செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், பேரூர் இளைஞரணி செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். இளைஞரணி மருது, பொறியாளர் அணி ராகுல் பிரசாத், மாணவரணி பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போடி காமராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர்.

    Next Story
    ×