தி.மு.க. பொதுக்கூட்டம்

தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. பொதுக்கூட்டம்
Published on

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் தி.மு.க. கிளை சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மாநில பொதுக்குழு ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கேபிள்ராஜா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பேரூராட்சி சேர்மன்கள் ஜெயராமன், பால்பாண்டி, பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், நகர துணைசெயலாளர் ஸ்டாலின், பொருளாளர் கண்ணன், அண்ணாதுரை, இளைஞரணி வெற்றிசெல்வம், ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், சிறுமணி, சகுபர் சாதிக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டியன், விவசாய அணி முருகன் மற்றும் ராஜாராம், ராஜா, பெரியகருப்பன், திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com