search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் தி.மு.க. கவுன்சிலரின் வீடு இடிந்து விழுந்தது
    X

    மழையில் இடிந்த வீடு

    மழையால் தி.மு.க. கவுன்சிலரின் வீடு இடிந்து விழுந்தது

    • வாடிப்பட்டியில் விடிய, விடிய பெய்த மழையால் தி.மு.க. கவுன்சிலரின் வீடு இடிந்து விழுந்தது.
    • எதிர்பாராத விதமாக மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் பேரூராட்சி கவுன் சிலர் வீடு இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன் கோட்டை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நல்லம்மாள் (வயது 62). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5 மணிக்கு பக்கத்து வீட்டில் உள்ள மகனை பார்ப்பதற்காக எழுந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக விடிய, விடிய பெய்த மழையால் மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், வீட்டு உபயோக பொருட்கள் இடுபாடுகளுக்குள் சிக்கின.

    அதேபோல் நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் கருவறை வரை 3 அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்து தெப்பக்குளமாக காட்சியளித்தது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்து பின்னர் வடிந்தது.

    வாடிப்பட்டி பகுதியில் வயல்வெளிகள், தென்னந் தோப்புகளில் மழைநீர் தேங்கி வடிந்து செல்ல முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கி நிற்கிறது.

    Next Story
    ×