search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆயிரம் மூட்டை நெல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்
    X

    2 ஆயிரம் மூட்டை நெல் காணிக்கை செலுத்திய பக்தர்கள்

    • கள்ளழகர் கோவிலுக்கு 2 ஆயிரம் மூட்டை நெல்லை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினார்கள்.
    • ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.

    அப்போது பக்தர்கள் காணிக்கையாக உண்டிய லில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டுமின்றி, நேர்த்திக்கடனாக தங்களது நிலத்தில் விளைந்த நெல் மணிகளையும் கள்ளழகர் என்ற சுந்தரராஜா பெரு மாளுக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம்.

    இதற்காக நெல்மணிகளை கொட்டி வைக்க தனி இட மும் ஆலயத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்து 28ஆயிரத்து 830 கிலோ (2ஆயிரம் முட்டை கள்) நெல்மணிகள் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

    அதனை ஏலம் விட்டு அளவீடு செய்யும் பணியில் கடந்த ஒரு வாரமாக கோவில் நிர்வாகத்தினல் செய்து வந்தனர். இதில் கோவிலுக்கு வருவாயாக ரூ.20 லட்சத்து 61ஆயிரத்து 280 கிடைத்துள்ளது. முந்தய ஆண்டு ஒரு லட்சம் கிலோ நெல்மணிகள் காணிக்கை யாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 28 ஆயிரம் கிலோ நெல்மணி கூடுதலாக காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×